ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு வ.உ.சி.மைதானத்தில் மாவட்ட மாணவர் அணி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version