அடையாளம் காணப்பட்ட சொகுசு அறை, அரங்கேறியவை என்னென்ன ???

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். டெல்லியில் இருந்து கைது செய்து அழைத்து வரப்பட்ட அவரிடம் சென்னையில் சுமார் 8 மணிநேரம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

முன்னதாக சிவசங்கர் பாபாவை சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளிக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசாரிடம், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சொகுசு அறையை அடையாளம் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்த, 3 நாட்கள் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version