நீலகிரியில் மலைப்பாதையை அலங்கரிக்கும் ஸ்பெக்தோடியா மலர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையை அலங்கரிக்கும் ஸ்பெக்தோடியா மலர்களின் சீசன் ஆரம்பமாகியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடவு செய்யப்பட்ட இம்மரங்களில் தற்போது மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட மலர்களின் சீசன் தற்போது நீலகிரி மாவட்டத்தில் துவங்கியுள்ளது. தும்பரிஜியா என்ற ஆங்கில பெயர் கொண்ட இவ்வகை மரங்கள், சாலையின் இருபுறத்திலும் அழகாக பூத்து குலுங்குகின்றன. கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ள மலர்கள் அருகே நின்று நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

Exit mobile version