ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி கோயிலில் மழை வேண்டி நடத்தப்பட்ட யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அக்னி நட்சத்திரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உக்கிரத்தை குளிர்விக்க, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மழைவேண்டி யாகம் செய்ய தமிழக அரசு அறிக்கை அனுப்பியுள்ளது.

இந்தநிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி கோயிலில் சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டது. முன்னதாக வருண ஜபம் செய்யப்பட்டு, சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்து யாகம் நடத்தப்பட்டது. மழைவேண்டி நடத்தப்பட்ட இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version