புத்தாண்டை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை

புத்தாண்டையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

2019 புத்தாண்டு தமிழகம் முழுவதும் கோயில்கள், பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்றது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பூஜை பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருவதற்கு தடை விதித்து துணிப்பைகளில் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.

Exit mobile version