News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஒரு கோடி பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் பற்றிய தொகுப்பு..

Web Team by Web Team
August 17, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஒரு கோடி பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் பற்றிய தொகுப்பு..
Share on FacebookShare on Twitter

 நாடு முழுவதும் உள்ள ஆன்மிகவாதிகளை 48 நாட்கள் காஞ்சிபுரத்தில் சங்கமிக்க செய்த அத்திவரதர் இன்று மீண்டும் குளத்திற்குள் பள்ளி கொள்ள செல்கிறார். ஒரு கோடி பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்தி வரதர் வைபவம் குறித்த செய்தித் தொகுப்பு.

40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் தரிசனம் இந்த ஆண்டு நடைபெற்றது. வாழ்வில் காணக் கிடைக்காத அரிய பாக்கியம் இதுவென்பதால், ஜுலை 1-ஆம் தேதி முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி பக்தியோடு படையெடுத்தனர். திசை எட்டும் இருந்து பக்தர்களை காந்தம் போல் ஈர்த்த அத்திவரதர், கடந்த 47 நாட்களாக அவர்களுக்கு தரிசனம் அளித்து அருள்பாலித்தார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு 1979ஆம் ஆண்டு அத்திவரதர் காட்சி தந்தபோது, சுமார் 10 லட்சம் பக்தர்கள் வந்து தரிசித்து சென்றதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த முறை தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களும் அத்திவரதர் வைபவம் குறித்து விரிவாக செய்தி வெளியிட்டதால், அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 1979-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அத்திவரதரின் புகைப்படங்கள் கருப்பு-வெள்ளை நிறத்திலேயே இருந்தன. அதுவும் குறைந்த அளவு படங்களே எடுக்கப்பட்டு இருந்தன. ஆனால், இந்த முறை வண்ண.. வண்ண.. பட்டு ஆடையில் ஜொலித்த அத்திவரதரின் புகைப்படங்கள் சயன கோலத்திலும், நின்ற நிலையிலும் வெளியாகி விற்பனையிலும் சாதனை படைத்தன. 47 நாட்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை சேவித்துள்ளனர். தமிழக அரசு செய்து இருந்த அடிப்படை வசதிகள் சிறப்பாக இருந்ததால், சிறிய நகரமான காஞ்சிபுரம், அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்களை அன்புடன் வரவேற்றது. 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்தி வரதர், அமிர்தசரஸ் குளத்தில் பள்ளி கொள்கிறார். இனி, 2059ம் ஆண்டு தான் அத்திவரதரை தரசிக்க முடியும். நாடு முழுவதும் பக்தர்களை ஆட்கொண்ட அத்திவரதர் அவர்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்து இருப்பார், இந்த முறை அத்திவரதரை கண்டவர்கள், அடுத்த முறையும் அவரை தரிசிப்பதற்கான பாக்கியத்தை பெற வாழ்க்கையில் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த பாக்கியம் கிடைக்க அத்திவரதர் அருள்பாலிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

Tags: athivaratharkancheepuramspecial package
Previous Post

விவசாயிகளின் தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்

Next Post

கடன் வாங்கும் வாடிக்கையாளருக்கு வட்டி தரும் வங்கி..

Related Posts

காஞ்சிபுரத்தில், பழமையான மரம் அகற்றி வேறு இடத்தில் நடப்பட்டது
TopNews

காஞ்சிபுரத்தில், பழமையான மரம் அகற்றி வேறு இடத்தில் நடப்பட்டது

October 14, 2019
ஐ.நா. சபைக்கு நிதி பற்றாக்குறை – அதன் சிறப்பு தொகுப்பு
TopNews

ஐ.நா. சபைக்கு நிதி பற்றாக்குறை – அதன் சிறப்பு தொகுப்பு

October 13, 2019
மாமல்லபுரத்தில் தலைவர்கள் பேசுவதற்காகக் குண்டு துளைக்காத அறை ஏற்பாடு
TopNews

மாமல்லபுரத்தில் தலைவர்கள் பேசுவதற்காகக் குண்டு துளைக்காத அறை ஏற்பாடு

October 9, 2019
அத்திவரதர் தரிசனத்திற்காக உழைத்த அனைத்து துறையினருக்கும் முதலமைச்சர் நன்றி
TopNews

அத்திவரதர் தரிசனத்திற்காக உழைத்த அனைத்து துறையினருக்கும் முதலமைச்சர் நன்றி

August 16, 2019
46வது நாளில் புஷ்பாங்கி சேவையில்  அருள்பாலித்தார் அத்திவரதர்
செய்திகள்

46வது நாளில் புஷ்பாங்கி சேவையில் அருள்பாலித்தார் அத்திவரதர்

August 15, 2019
38வது நாளில் இளஞ்சிவப்பு, மஞ்சள் நிற பட்டாடையில் காட்சி கொடுக்கும் அத்திவரதர்
செய்திகள்

38வது நாளில் இளஞ்சிவப்பு, மஞ்சள் நிற பட்டாடையில் காட்சி கொடுக்கும் அத்திவரதர்

August 7, 2019
Next Post
கடன் வாங்கும் வாடிக்கையாளருக்கு வட்டி தரும் வங்கி..

கடன் வாங்கும் வாடிக்கையாளருக்கு வட்டி தரும் வங்கி..

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version