தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் அளவு குறைவு : சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஜூன் மாதம் முதல் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை குறைவான அளவே பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டை விட 36 சதவீதம் அதிகமாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரியாகவும் குறைந்தபட்சமாக 27 டிகிரியாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version