மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களைக் கணக்கிடும் வகையில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களைக் கணக்கிடும் வகையில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள்தோறும் வரும் பக்தர்களைக் கணக்கிடவுள்ளனர். இதன்மூலம் பக்தர்களின் வருகைக்கு ஏற்றபடி லட்டுகளைத் தயாரிக்க முடியும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post