நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி உள்ளிட்டோர் போராட்டம்

நாடாளுமன்ற  வளாகத்தில் போராட்டத்தில்  ஈடுபட்ட அவர்கள், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் விவசாயக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு கோஷம் முழக்கினர்.

Exit mobile version