செருப்பில் 14,000 கி. மீ பயணம் செய்த பாம்பு :அதிர்ச்சியடைந்த பெண்

விமானத்தில் பயணிகள் பயணம் செய்வது இயல்பு ஆனால் இங்கே பாம்பு ஒன்று ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்காட்டிஷ் வரை பயணம் செய்துள்ளது. மரியா பாக்ஸால் என்னும் பெண் ஆஸ்திரேலியாவிலிருந்து தனது விடுமுறைகளை முடித்துவிட்டு ஸ்காட்லாண்ட் வந்தவுடன் தனது பெட்டிகளை திறந்துள்ளார். அதில் இருந்த செருப்பினில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.அந்த பாம்பானது விமானத்தில் சுமார் 14,000 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது.

ஒரு வேளை நம்மை ஏமாற்றுவதற்கு யாராவது ரப்பர் பாம்பை வைத்திருக்கலாம் என நினைத்து அதனை தொட்டு பார்த்துள்ளார்.அது அசைந்ததை கண்டவுடன் திடுகிட்ட அந்த பெண் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல்களை தெரிவித்தார் .பின்னர் அந்த இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து பாம்பை மீட்டனர்.

அந்த பாம்பானது பத்திரமாக மீட்கப்பட்டு விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் விடப்பட்டது.

Exit mobile version