புன்னகை தூதரானார் “சச்சின் டெண்டுல்கர்”!

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஸ்வச் முக் அபியான் திட்டத்தின் கீழ் புன்னகை தூதராக ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பையைப் பிறப்பிடமாக கொண்ட சச்சின் டெண்டுல்கர், தன் கிரிக்கெட் வாழ்நாளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர். சிலகாலம் பாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போது மகாரஷ்டிரா மாநிலத்தின் ஸ்வச் முக் அபியான் திட்டத்தின் கீழ் புன்னகை தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பான தருணம் என்று இரசிர்கர்கள் தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version