சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஜெகதீஷ்சந்திரா, வி.பவானி சுப்பராயன், அப்துல்குத்தூஸ், ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி, ஆதிகேசவலு ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதி முதல் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் 6 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு செய்த பரிந்துரையை ஏற்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, அந்த 6 கூடுதல் நீதிபதிகளும், நிரந்தர நீதிபதிகளாக வருகிற 9-ஆம் தேதி பதவி ஏற்கின்றனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமணி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Exit mobile version