பெண்கள் சபரிமலைக்கு சென்று வழிபட நினைத்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – சிவக்குமார்

பெண்கள் ஐயப்பனை கோயிலுக்கு சென்று வழிபட விரும்பினால் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், ஐயப்பனை பெண்கள் வீட்டில் இருந்து வணங்கலாம் என்று தெரிவித்தார். ஆனால் கோயிலுக்கு செல்ல முற்பட்டால் பாதுகாப்பின்மை காரணமாக பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.

பண்டைய காலம் முதலே பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்ததாகவும் மீ டூ போன்ற விவகாரத்தில் இரண்டு பேருக்கு இடையே உள்ள பிரச்சனையை பொது வெளியில் வெளிப்படுத்துவது அநாகரீகமானது என்றும் அவர் கருத்து கூறினார்.

Exit mobile version