துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபரிமலையில் ஐயப்பனை தரிசித்தார்

48 நாள் விரதத்திற்கு பின், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார். நேற்று பிற்பகல் பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்டார். நேற்று இரவு பம்பைக்கு சென்ற துணை முதலமைச்சருக்கு கேரள அதிகாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு துணை முதலமைச்சர் நேற்றிரவு பம்பையிலேயே தங்கினார்.

இன்று அதிகாலை பம்பை நதியில் நீராடி கரிமலை பாதை வழியாக இருமுடியை சுமந்தபடி துணை முதலமைச்சர் நடந்து சென்று கோவிலை அடைந்தார். கோயிலுக்கு சென்ற துணை முதலமைச்சருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு சபரிமலை மேல்சாந்தி மற்றும் தந்திரியை சந்தித்து துணை முதலமைச்சர் ஆசி பெற்றார்.

பின்னர் பதினெட்டாம் படி வழியாக இரு முடியுடன் சபரிமலை ஐயப்பனை தரிசித்த துணை முதலமைச்சருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

Exit mobile version