தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்த சிங்கள கடற்படை

எல்லை தாண்டி வந்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 4 பேரை, சிங்கள கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர், இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை விரட்டியுள்ளது. தொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிங்கள கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி வந்ததாக கூறி இந்த நடவடிக்கையை இலங்கை கடற்படை மேற்கொண்டுள்ளது. இந்தச் சம்பவம் தமிழக மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version