இந்திய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் மேரி கோம்

பிரபல குத்துச் சண்டை வீரர்களான மேரி கோம் மற்றும் விஜய் குமார் ஆகியோர் இந்திய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டெல்லி நேரு பூங்காவில் NHRC எனப்படும் இந்திய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. இக்கூட்டதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும் பிரபல குத்துச் சண்டை வீராங்கனையுமான மேரி கோம் மற்றும், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய இந்திய மனித உரிமை ஆணையத்தின் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான எச்.எல்.தத்தா, நாட்டில் அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் உறுதியுடன் உள்ளதாகவும், மேலும் மனித உரிமைகள் தொடர்பாக இணையதளம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கண்காட்சி நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் பிறகு நடைபெற்ற நடைபேரணியில் மேரிகோம் மற்றும் விஜயகுமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Exit mobile version