செந்தில்பாலாஜி ரெய்டும் கைதும் கடந்துவந்த பாதை! திமுக சமஸ்தானமே ஆட்டம்!

 

ஜுன் 13, இரவு 9.45 மணி – அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்றார்.

நள்ளிரவு 12.30 மணி – ஒரு அமலாக்கத்துறை அதிகாரி மற்றும் மத்திய பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் காரில் சென்றனர்.

நள்ளிரவு 1.18மணி – சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டில் 17 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.

நள்ளிரவு 1.22 மணி – வழக்கறிஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் செந்தில்பாலாஜி வீட்டிற்கு வருகை தந்த நிலையில், பரபரப்பான சூழல் காணப்பட்டது.

நள்ளிரவு 1.36 மணி – அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து ஸ்டாலின் அவரது வீட்டில் மூத்த அமைச்சர்களுடன் சுமார் 4 மணிநேரம் ஆலோசனை மேற்கொண்டார்.

நள்ளிரவு 1.54 மணி – அமலாக்கத்துறை வானங்கள் செந்தில்பாலாஜி வீட்டில் இருந்து புறப்பட்டது.

நள்ளிரவு 2 மணி – ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை வாகனத்தில் புறப்பட்டார்.

நள்ளிரவு 2.04 மணி – மெரினா கடற்கரை சாலை வழியாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

நள்ளிரவு 2.06 மணி – திடீரென நெஞ்சுவலி எனக்கூறி காருக்குள் அலறிய அமைச்சர் செந்தில்பாலாஜி.

நள்ளிரவு 2.09 மணி – செந்தில் பாலாஜியை உடல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

நள்ளிரவு 2.11 மணி – நெஞ்சுவலிக்குதுனு காருக்குள் உருண்டு புரண்டு அலறி, அழுது, துடித்து நாடகமாடிய செந்தில்பாலாஜி.

நள்ளிரவு 2.14 மணி – மயக்கமடைந்த நிலையில் இருந்த செந்தில் பாலாஜியை ஸ்டெச்சரில் அழைத்து சென்று ஐசியூ-வில் அனுமதித்தனர்.

அதிகாலை 3.01 மணி – விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி செந்தில்பாலாஜியை காண ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றார்.

அதிகாலை 3.07 மணி – திமுக நிர்வாகிகளையும் மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரி மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன் அமைச்சர் உதயநிதி வாக்குவாதம்.

காலை 7 மணிக்கு மேல் திமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.

மருத்துவமனைக்கு திமுகவினர் படையெடுப்பை அடுத்து போலீசார் குவிப்பு.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவுவதால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

Exit mobile version