அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் அதிரடி கைது!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் வீடுகளில் நேற்று நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையில் முக்கியமான சில ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று 13-06-2023 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீடு மற்றும் கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது தம்பி அசோக்கின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினரால் சோதனை நடைபெற்றது. மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அலுவலகத்திலும் இந்த சோதனையானது நடைபெற்றது. சோதனையைத் தொடர்ந்து கிடைக்கப்பட்ட ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்கள் போன்றவற்றை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version