காஞ்சிபுரத்தில் மோடி மற்றும் சீன அதிபரின் வருகயையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகயையொட்டி பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

வரும் 12ம் தேதி இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். இதனையொட்டி பேருந்து நிலையம், வெண்ணெய் திரட்டி பாறை, கடற்கரை கோயில், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் போன்ற பகுதிகளில் சிற்பங்களை சுத்தம் செய்தல், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுதல், புதிய புல்தரைகள், புதிய மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.

Exit mobile version