சத்தியமங்கலம் அருகே பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

சத்தியமங்கலம் அருகே ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவ, மாணவிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி பூட்டிக்கிடந்ததை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் காரணமாக தங்களது படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி சாலையில் அமர்ந்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த பவானிசாகர் போலீசார், தற்காலிக ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர்

Exit mobile version