சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மாற்றம்

 

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தஹில் ரமனி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார். இதில் மற்றொருவரான ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கீதா மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version