சபரிமலைக்கு சென்ற பெண்கள் பாதுகாப்பு கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா, பிந்து ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகியோர் சமீபத்தில் சென்று வந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிறகு, அவர்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், வீட்டுக்கு சென்ற கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கனகதுர்கா மற்றும் பிந்து, பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version