விடியா திமுக அமைச்சர் பொன்முடி தொகுதியில் மக்கள் போராட்டம்!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கால்வாய், குடிநீர் வசதி ஏற்படுத்தாமல், தார் சாலை மட்டும் போடுவது ஏன் எனக்கூறி பட்டியலின மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் உள்ள புதிய காலனியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், சிமெண்ட் சாலையை அகற்றிவிட்டு புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு எதிப்பு தெரிவித்தனர். மேலும் கால்வாய் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட இயந்திரத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுக பேரூராட்சி மன்ற தலைவர் கமிஷன் பெறுவே, இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். திமுக அமைச்சர் பொன்முடியின் தொகுதியில் நடைபெறும் அவலங்களால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.YouTube video player

Exit mobile version