நீதிபதிகள் உரிய நேரத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும்:சஞ்சய் கிஷன் கவுல்

நீதிபதிகள் தங்களுக்குகான பணி நேரத்தை முழுமையாக பயன்படுத்தி வழக்குகளை விரைந்து முடித்து வைக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையமும், புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையமும் இணைந்து நடத்தும் இரண்டு நாள் கருத்தரங்கம் புதுச்சேரியில் நடைபெற்றது. கருத்தரங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, மணிக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், இந்தியாவில் வழக்குகள் விசாரிக்க கால தாமதம் ஆவதால் நீதி அனைவருக்கும் சமமாக கிடைக்கவில்லை என்றார்.

Exit mobile version