தானே சம்ருதி எக்ஸ்பிரஸ் பாலம் கட்டும் பணியின்போது விபத்து! 17 பேர் உயிரிழப்பு! எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில்
17பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் , வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்,

அதில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், விபத்தில் இறந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுருத்துவதுடன் ,

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Exit mobile version