டென்மார்க் ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால் பங்கேற்றார். இவர், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார்.

ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சாய்னா நேவால் முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது செட்டில் 21-17 என்ற கணக்கில் அகானே யமாகுச்சியை வீழ்த்திய சாய்னா நேவால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Exit mobile version