இங்கிலாந்து பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா நேவால் வெளியேற்றம்

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பிரபல இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் காலிறுதியில் சீன தைபே வீராங்கனையிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் காலிறுதி போட்டியில், இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், நடப்பு சாம்பியனான சீன தைபே வீராங்கனையான தாய் ஜூ யிங்குடன் மோதினார்.

37 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தாய் ஜூ யிங், 21க்கு 15 மற்றும் 21க்கு 19 ஆகிய நேர் செட் கணக்கில் சாய்னாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

தாய் ஜூ யிங்குடன் மோதிய கடைசி 12 ஆட்டங்களிலும், சாய்னா வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியின் மூலம் சாய்னா போட்டியிலிருந்து வெளியேறினார்.

Exit mobile version