சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு

சபரிமலையில் 144 தடை உத்தரவை மேலும் நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் என போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், 144 உத்தரவை வரும் 12-ம் தேதி வரை நீடித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு, இளவங்கல் முதல் சன்னிதானம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சபரிமலையில் அய்யப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள், போலீஸ் கெடுபிடிகள் பற்றி ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஸ்ரீஜெகன், ராமன், முன்னாள் டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவை கேரள உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த குழு வரும் 10-ம் தேதிக்குள் தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version