சபரிமலையில் 144 தடை உத்தரவு நாளை இரவு வரை நீட்டிப்பு

சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நாளை இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, சபரிமலைக்கு வழிபாடு நடத்தச் சென்ற பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடந்த 8 நாட்களாக கேரள சட்டப்பேரவையை முடக்கின.

இந்நிலையில் தடை உத்தரவு நாளை இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version