இரஷ்யாவில் நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சி STOP! அப்போ NEXT..!

ரஷ்யாவில் அரசுக்கு எதிரான தனியார் படையின் புரட்சியானது தற்போது கைவிடப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. அரசுடன் கிளர்ச்சியாளர்கள் சமரசம் செய்துகொண்ட நிலையில், தனியார் படைத் தலைவர் வாக்னர் பக்கத்தில் உள்ள பெலாரஸ் நாட்டுக்கு வெளியேறினார். உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைந்து வாக்னர் குழு என்ற தனியார் படை செயல்பட்டு வந்தது. பாக்மத் நகரை கைப்பற்றியது உள்ளிட்ட பல முக்கிய கட்டங்களில் இந்த படை பங்காற்றியிருந்தது.

ரஷ்யாவுக்கு எதிராக போர்க்கொடி…

வாக்னர் கூலிப்படையானது  திடீர் திருப்பமாக ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. உக்ரைனுக்கு எதிரான போரில் தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் தங்கள் படையைச் சேர்ந்த இரண்டாயிரம் வீரர்களை ரஷிய ராணுவம் கொன்றுவிட்டது எனவும் குற்றசாட்டு வைத்தது வாக்னர் படை. அதிலும் குறிப்பாக ரஷிய பாதுகாப்பு மந்திரி ஷெர்ஜிஷோய்குவை வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோசின் கடுமையாக விமர்சித்தார். ரஷ்யாவின் ரோஸ் டாவ் ஆன் டானுக்குள் தடையின்றி நுழைந்த வாக்னர் படையை அங்கிருந்து ஆயிரம் கி,மீ தொலைவில் உள்ள தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறுமாறு பிரிகோசின் உத்தரவிட்டார். தனியார் படையின் இந்த செயல் ரஷ்ய அரசுக்கு அதிர்ச்சியை அளித்தது. இது மிகப்பெரிய துரோகம் என்று ரஷ்ய அதிபர் புதின் கொந்தளித்தார். கிளர்ச்சியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

முடிக்கப்பட்ட கிளர்ச்சி…!

இந்நிலையில் கிளச்சியினை வாக்னர் படையானது முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது. ரஷ்யா கேட்டுக்கொண்டதன் பேரிலும் அதன் நட்பு நாடானா பெலாரசின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகா ஷென்கோ, வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோசினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து பிரிகோசின் தனது வீரர்களை மீண்டும் உக்ரைனில் உள்ள கள முகாம்களுக்கு திரும்ப உத்தரவிட்டார். அங்கு அவர்கள் மறுபடியும் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து உக்ரைன் வீரர்களுக்கு எதிராக சண்டையிடுவார்கள். அதனைத் தொடர்ந்து வாக்னர் படைத் தலைவர் பிரிகோசின் பெலாரஸ் நாட்டுக்குச் செல்வார். அவருக்கு எதிரான ஆயுத கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் என ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவித்தார். தனியார் படை உடனான சமரசத்தால் ரஷியாவில் பெரும் ரத்த சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விவகாரம், ரஷ்ய பாதுகாப்பு அமைப்பில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அதன் எதிரணி நாடுகள் விமர்சித்துள்ளன. தொடர்ந்து தனியார் படை, ரஷ்ய ராணுவத்துடன் இணக்கத்துடன் செயல்படுமா, அதன் தலைவர் பிரிகோசின் பெலாரசின் இருந்தபடி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Exit mobile version