விவசாயி வங்கி கணக்கிலிருந்து ரூ.65,000 மர்மநபர்களால் கொள்ளை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விவசாயி ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் மர்மநபர்களால் பணம் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதுகுளத்தூர் அருகே வெங்கலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம். இவர் தேசிய வங்கியில் கணக்கு வைத்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம் கார்டின் நம்பர், ரகசிய நம்பரை கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் சண்முகத்தின் வங்கி கணக்கில் இருந்து 65 ஆயிரம் பணம் எடுத்ததாக செல்போனிற்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து வங்கியில் விசாரித்த போதுஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்கள் வாங்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகம் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version