சென்னையில் கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் 433 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 29-ம் தேதி முதல் ஜி ஸ்கொயர், ரேவதி குழுமம் உள்ளிட்ட 4 பெரிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இதில் 25 கோடி ரூபாய் பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவை நேற்று வரை கணக்கீடு செய்யப்பட்டன. இதில் 433 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post