கோயம்பேடு அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்

கோயம்பேடு அருகே உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 12 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை, கோயம்பேடு காவல் நிலையத்திற்குட்பட்ட மூகாம்பிகை நகர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 12 லட்சத்து 37 ஆயிரத்து 390 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூரில் இருந்து ஆசிப் என்பவர் சென்னைக்கு இந்தப் பணத்தை கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பூந்தமல்லி கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Exit mobile version