வங்கி ஏடிஎம்மிற்கு எடுத்து செல்லப்பட்ட ரூ.44 லட்சம் பணம் பறிமுதல்

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 44 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு இன்றும் 3 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாட்டம் செட்டிபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோனையிட்டபோது தனியார் ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்ப உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 44 லட்சம் ரூபாய் பிடிபட்டது. இதனையடுத்து பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்த பணத்தை மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகததிற்கு கொண்டு சென்று தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version