சேத்தியாதோப்பு அருகே ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 லட்சத்து 8 ஆயிரத்து 823 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு , புவனகிரி ஆகிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வெவ்வேறு நபர்களிடம் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 5 லட்சத்து 8 ஆயிரத்து 823 ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர், பறிமுதல் செய்த பணத்தை புவனகிரி வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

Exit mobile version