பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி

புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த சி.ஆர்.பி.ஃப் வீரர்கள் 40 பேரின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புல்வாமா பகுதியில் கடந்த மாதம் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு, ஒரு கோடியே, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

உயிர் நீத்த சி.ஆர்.பி.ஃப் வீரர்களின் குடும்பத்தினரின் குறைகளை நிவார்த்தி செய்வது தொடர்பாக விரைவில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version