சென்னையில் சாலை பாதுகாப்பு குறித்து கோடை கால விழிப்புணர்வு முகாம்

சென்னை மாநகராட்சியுடன், ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இணைந்து நடத்தும், சாலை பாதுகாப்பு கோடை கால முகாம் தொடங்கியுள்ளது.

சென்னை அண்ணாசதுக்கம் பகுதியில் உள்ள குழந்தைகள் போக்குவரத்து பயிற்சி பூங்காவில் தொடங்கிய கோடை கால சாலை பாதுகாப்பு
விழிப்புணர்வு முகாம், வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. துவக்க நிகழ்ச்சியில், தமிழக தொழில்கள் துறையின் துணை ஆணையர் கோவிந்தராவ், கல்வித்துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படும் சாலை விதிகள் குறித்தும், அவர்கள் கற்று கொள்ளும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். இலவசமாக நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு முகாமில், 350க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். பெண்கள் இரு சக்கர வாகனம் ஒட்டும் போது விபத்தில் சிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டிய சாலை விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Exit mobile version