புவனகிரியிலில் அதிகாரித்துவரும் சாலை விபத்துகள்!

Road accidents in Bhuvanagiri

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை கிராமத்தில் சாலை விரிவாக்க பணிக்காக அதிக பாரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், தப்பியோடிய ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள், 5க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், புவனகிரி – குறிஞ்சிப்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஓட்டுநர்கள் அலட்சியமாக செயல்படுவதாகவும், தூக்கக் கலக்கத்தில் வாகனங்களை இயக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version