35 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த நபர் போராடி மீட்பு

சென்னை கடப்பேரியில் 35 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர். கடப்பேரி திருவிக நகரைச் சேர்ந்த சந்தோஷ், வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சந்தோஷை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்புத் துறையினரின் துரிதமான நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Exit mobile version