குற்றாலம் ஐந்தருவிகளில் குளிக்க தடை நீக்கம்

குற்றால அருவிகளில் குளிக்க தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததை ஒட்டி குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளிக்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.

Exit mobile version