நாகர்கோவிலில் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் முகாம்கள்

 

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து கேரள மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாகர்கோவிலில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிஸ்கட், குடிநீர், அரிசி , போர்வைகள், மருந்துகள் என பொதுமக்கள் அளிக்கும் பொருட்கள் இங்கு சேகரிக்கப்பட்டு, கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version