இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வேட்பாளர் வெளியிடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி 30ம் தேதி நிறைவுற்றது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் 3 மணியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் மனுவை திரும்ப பெற்ற நிலையில், 23 பேர் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் 3 பேர் மனுவை திரும்பப் பெற்ற நிலையில், 12 பேர் களத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் தொக்குதியில் 9 பேர் களத்தில் உள்ளனர்.

Exit mobile version