ஹஜ் பயணம் முடித்து திரும்பிய 421 பேருக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு

புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பியவர்களை,விமான நிலையத்தில் உறவினர்கள் வரவேற்றனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளுள் ஒன்று புனித ஹஜ் பயணம் ஆகும். இந்த ஆண்டு கூடுதலாக 881 பேருக்கு ஹஜ் பயணம் செல்ல மத்திய அரசு அனுமதியளித்தது. இதனையடுத்து தமிழகத்திலிருந்து 7 குழந்தைகள் உள்பட 4 ஆயிரத்து 627 பேர் பல குழுக்களாக 40 நாட்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.

அதில் 421 பேர் கொண்ட முதல் குழுவினர் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினர். சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜாஃபர் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹஜ் பயணிகளின் உறவினர்கள் ஆரத்தழுவி அவர்களை வரவேற்றனர்.

Exit mobile version