73வது சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சி

73வது சுதந்திர தின விழா வரும் வரும் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று, கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி ராஜாஜி சாலையில் நடைபெற்றது. 2வது நாளாக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், தமிழக காவல் படையின் பல்வேறு படைப் பிரிவை சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். இதையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Exit mobile version