மதுரை மாநாடுக்கு அழைப்பு விடுக்கும் பொருட்டு மரக்கன்றுகள் வழங்கினார் முன்னாள் அமைச்சர்!

வாரிசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதில் இருந்து விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில், தமிழக மாணவர்கள் பங்கேற்கவில்லை என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.மதுரை, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் வீர வரலாற்றின் மாநில அளவிலான மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடைபெற உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழாவில் விளம்பரம்தான் உள்ளது என்றும், விலாசம் இல்லை என்றும் விமர்சித்தார்.

Exit mobile version