ரங்கோலி வரைந்து வாக்கு பதிவை அதிகரிக்க தேர்தல் விழிப்புணர்வு

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி குஜராத்தின் வதோதராவில் ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. தேர்தலில் அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம், தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், குஜராத்தின் வதோதராவில் ரங்கோலி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

Exit mobile version