முதலமைச்சர் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்

அதிமுக- பாமக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டநிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை ஏற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சென்றார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசித்தார். அப்போது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Exit mobile version