கஜா புயல் நிவாரணமாக ரூ.15,000 கோடி வழங்க வலியுறுத்தல்

முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயலுக்கு 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். வர்தா புயல் பாதிப்புக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டுமென்று பிரதமரிடம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

கஜா புயலுக்கு உடனடியாக 1500 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்டார்.

Exit mobile version