தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சியானது வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தெற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என தெவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, தமிழக கடலோர துறைமுகங்களான சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் காற்றழுத்ததை குறிக்கும், குறைந்தபட்ச எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

Exit mobile version