ரஃபேல் சீராய்வு மனு: மத்திய அரசு புதிய பிரமாண பத்திரம் தாக்கல்

ரஃபேல் விவகாரத்தின் சீராய்வு மனு மீது மத்திய அரசு புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

ரஃபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனவே தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த ரஃபேல் ஒப்பந்தத்தை விட தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் மூலம் 2.86 சதவீதம் விலை குறைவாக உள்ளது என மத்திய தணிக்கை ஆணையம் கூறியிருக்கிறது. இதன் மூலம் ரஃபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது என பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தகவலளித்துள்ளது.

Exit mobile version